ஷா ஆலம், ஆகஸ்ட் 28: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலேசியர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்பில் இல்லாத மலேசியர்களின் சமீபத்திய பட்டியலை அரசாங்கம் பெற்றுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
அவர்களின் தற்போதைய நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அன்வார் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நிலை குறித்து தகவல்களைப் பெறுவதற்காக தொடர்புடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் நிலை குறித்து இந்தியா, சீனா மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் அரசாங்கம் ஒருங்கிணைத்து வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, நேபாளத்தில் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேர் கொண்ட குழுவில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM-ஐச் சேர்ந்த இரு அதிகாரிகள் மற்றும் நேபாளத்தில் பணியாற்றும் உள்ளூர் முகவர் ஒருவர் உட்பட ஒன்பது பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தொடரும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, மலேசியர்களின் பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.







