தேசிய தினத்தை முன்னிட்டு 24 மணி நேர ரயில்-பேருந்து சேவை

9 ஆகஸ்ட் 2026, 8:11 AM
தேசிய தினத்தை முன்னிட்டு 24 மணி நேர ரயில்-பேருந்து சேவை
தேசிய தினத்தை முன்னிட்டு 24 மணி நேர ரயில்-பேருந்து சேவை

கோலாலம்பூர்: இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிரசரானா (Prasarana) நிறுவனம் தனது பொதுப் போக்குவரத்துச் சேவைகளை 24 மணி நேரமும் இடைவிடாமல் இயக்குமென அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

"தேசிய தினத்தை ஒட்டி 24 மணி நேர பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்க பிரசரானா உறுதியளித்துள்ளது.

இதன் மூலம் அதிகமான மக்கள் புத்ராஜெயாவிற்கு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

படம் : பெர்னாமா

இங்கு, பந்தாய் டாலாமில் உள்ள பெட்ரோனாஸ் NPE (Petronas NPE Pantai Dalam) தளத்தில் நடைபெற்ற ஜாலூர் கெமிலாங் நிகழ்ச்சியினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் ஃபஹ்மி இதனைத் தெரிவித்தார்.

மேலும், இவ்வாண்டின் மலேசியா தினக் கொண்டாட்டம் (Malaysia Day ) சரவாக், கூச்சிங்கில் உள்ள போர்னியோ கலாச்சார மையத்தில் நடைபெறும் என்பதை ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.