இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானி: அம்பாங்கில் போதைப் பொருளைப் பெற்றதாகப் புக்கிட் அமான் தகவல்

4 ஆகஸ்ட் 2026, 5:31 AM
இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானி:  அம்பாங்கில் போதைப் பொருளைப்  பெற்றதாகப் புக்கிட் அமான் தகவல்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 4: இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட விமானி, அம்பாங் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்தான் அந்தத் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகத்தைப் பெற்றுள்ளார் என்று புக்கிட் அமான் காவல் துறை தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநர் கமிஷனர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் இந்தத் தகவலை வெளியிட்டார்.

விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் தனது விமானப் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தப் போதைப்பொருளைப் பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

"அந்தச் கும்பலைத் தொடர்புகொள்வதற்கு அவர் பயன்படுத்திய தொலைபேசி எண்ணையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த ஒட்டுமொத்த விநியோக வலையமைப்பையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்," என்று கமிஷனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளை சந்தேக நபர் எவ்வாறு தாண்டிச் சென்றார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வட்டார அளவிலான போதைப்பொருள் கும்பலுடன் அவருக்கிருக்கும் தொடர்புகளை வெளிக்கொணர இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.