35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்

26 ஜூலை 2026, 8:05 AM
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்

கோலாலம்பூர், ஜூலை 26 : அரச மலேசிய போலீஸ் படையில் 35 ஆண்டுகள் சேவையாற்றிய துணைத் தலைமை போலீஸ் அதிகாரி டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, இன்றுடன் தமது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த பதவிக்கு புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ இப்ராகிம் டாருஸ் தற்காலிகமாகப் பொறுப்பேற்கிறார்.

துணைத் தலைமை போலிஸ் அதிகாரிக்கான இந்த அதிகாரப்பூர்வ பொறுப்பு ஒப்படைப்பு நிகழ்ச்சி, கோலாலம்பூரில் புலாபோல் (PULAPOL) போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நாட்டின் தலைமை போலிஸ் அதிகாரி டான்ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்றது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.