பண்டமாரான் தொகுதியில் பொது வசதிகளை மேம்படுத்தும் சிலாங்கூர் அரசின் PSP திட்டம்

7 ஜூலை 2026, 4:45 AM
பண்டமாரான் தொகுதியில் பொது வசதிகளை மேம்படுத்தும் சிலாங்கூர் அரசின் PSP திட்டம்

ஷா ஆலாம், ஜூலை 7 - பண்டமாரான் (Pandamaran) தொகுதியில் 'புரொஜெக் சிலாங்கூர் பென்யாயாங்' (PSP - Projek Selangor Penyayang) திட்டத்தின் கீழ் வழிபாட்டுத் தலங்கள், பொது விளையாட்டு மைதானங்கள் மற்றும் குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு இம்முறை முன்னுரிமை வழங்கப்படும் என அதன் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ பாயு மற்றும் ஸ்ரீ அங்காசா குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வண்ணம் பூசும் முக்கியப் பணிகளும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும், அவற்றுக்கான ஒப்புதலைப் பெறுவதும் முன்பை விட மிக வேகமாகவும் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளதால் மக்களுக்குத் தேவையான வசதிகள் மிகச் சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் அவற்றின் தேவையைப் பொறுத்து பொதுவாக இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படுகின்றன.

சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் (SREP Phase 2), பொது வசதிகளை வலுப்படுத்துவதற்காக இத்திட்டத்திற்கு RM14 மில்லியன் நிதியை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதன் மூலம் பராமரிப்பு மற்றும் மேம்பாடு தேவைப்படும், குறிப்பாக 15 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மறுவண்ணம் பூசி, அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சூழலையும் வசதியையும் உயர்த்துவதே மாநில அரசின் முக்கிய நோக்கமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.