ஷா ஆலாம் LRT3 வழித்தடம் வார இறுதி நாட்களில் குடும்பங்களின் தேர்வாகிறது; இலவசப் பயணத்தை அனுபவிக்கும் மக்கள்

5 ஜூலை 2026, 9:34 AM
ஷா ஆலாம் LRT3 வழித்தடம் வார இறுதி நாட்களில் குடும்பங்களின் தேர்வாகிறது; இலவசப் பயணத்தை  அனுபவிக்கும் மக்கள்
ஷா ஆலாம் LRT3 வழித்தடம் வார இறுதி நாட்களில் குடும்பங்களின் தேர்வாகிறது; இலவசப் பயணத்தை  அனுபவிக்கும் மக்கள்
ஷா ஆலாம் LRT3 வழித்தடம் வார இறுதி நாட்களில் குடும்பங்களின் தேர்வாகிறது; இலவசப் பயணத்தை  அனுபவிக்கும் மக்கள்
ஷா ஆலாம் LRT3 வழித்தடம் வார இறுதி நாட்களில் குடும்பங்களின் தேர்வாகிறது; இலவசப் பயணத்தை  அனுபவிக்கும் மக்கள்
ஷா ஆலாம் LRT3 வழித்தடம் வார இறுதி நாட்களில் குடும்பங்களின் தேர்வாகிறது; இலவசப் பயணத்தை  அனுபவிக்கும் மக்கள்

ஷா ஆலாம், ஜூலை 5: ஷா ஆலாம் வழித்தடத்திலான எல்.ஆர்.டி 3 (LRT3) ரயில் சேவை, அதன் முதல் வார இறுதி செயல்பாட்டின் போது பொதுமக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இம்மாதம் ஜூலை 31-ஆம் தேதி வரை அரசாங்கம் வழங்கியுள்ள இலவசப் பயணச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கே பெருமளவில் குவிந்து வருகின்றனர்.

நேற்று காலை கிளன்மேரி 2 (Glenmarie 2) நிலையத்தில், பல குடும்பங்கள் தங்களது வார இறுதி நாளைக் கழிப்பதற்காக இந்த புதிய ரயில் சேவையைத் தேர்ந்தெடுத்ததால், பயணிகளின் கூட்டத்தை தொடர்ச்சியாகக் காண முடிந்தது.

தனியார் துறை ஊழியரான லீ லின் (Lee Lyn), பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமா (Bandar Utama) முதல் கிள்ளானின் ஜோஹான் செத்தியா (Johan Setia) வரை இணைக்கும் இந்த வழித்தடத்தில் உள்ள பல்வேறு இடங்களை ஆராய்வதற்கும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்கும் LRT3 ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது என்றார்.

"இது குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த வாய்ப்பு. ஒரு மாத இலவசப் பயணம் என்பது குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கான திட்டங்களை பட்ஜெட்டுக்குள் எளிதாக்குகிறது. அதே வேளையில் இந்த புதிய வழித்தடத்தைப் பயன்படுத்தும் அனுபவத்தையும் தருகிறது," என்று அவர் கூறினார்.

லீ லின் Foto MOHD KHAIRUL HELMY MOHD DIN/MEDIASELANGOR

அவரது கணவர் முகமட் ஹாஸிக் ஹம்ஸா (Mohd Haziq Hamzah), குறிப்பிட்ட இலக்கு எதையும் இன்னும் முடிவு செய்யாவிட்டாலும், இந்த விளம்பரக் காலத்தில் தங்களது குடும்பம் LRT3-ஐப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார்.

"இந்த மாதத்தில் இது இன்னும் இலவசமாக இருக்கும் போதே அனைவரும் இதனை ஒருமுறை வந்து முயற்சித்து பார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

லீ லின் தனது குடும்பத்துடன் Foto MOHD KHAIRUL HELMY MOHD DIN/MEDIASELANGOR

மதிய வேளையை நெருங்கிய போது, மாற்றுத்திறனாளிகள் உட்பட பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், ரயில்களில் கூட்டம் மேலும் அதிகரித்தது. சில நிலையங்களில், பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்னதாக சில ரயில்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இணைந்து LRT3 பயணத்தை ஒரு வார இறுதி கூட்டுச் செயல்பாடாக மாற்றியதால் அந்த இடமே உற்சாகமாகக் காணப்பட்டது.

கெர்ஜெயா (Kerjaya) நிலையத்தில் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் ரயிலில் ஏறிய வாடிக்கையாளர் சேவை ஊழியர், சித்தி நுருல் அஜிலா அயூப் (Siti Nurul Ajilah Ayob), இலவசப் பயணச் சலுகை தான் பல பெற்றோர்களைத் தங்களது பிள்ளைகளுடன் இந்த புதிய அனுபவத்தைப் பெறத் தூண்டியுள்ளது என்றார்.

"நேற்று இங்கு வந்த பலரும், இது இலவசமாக இருக்கும் போதே தங்களது பிள்ளைகளுக்கு இந்த புதிய அனுபவத்தைக் காட்ட வந்த பெற்றோர்கள் தான் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

சித்தி நூருல் அஜிலா ஆயோப் Foto MOHD KHAIRUL HELMY MOHD DIN/MEDIASELANGOR

ஷா ஆலாம் வழித்தட LRT3 திட்டம் என்பது நாட்டின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட RM16.63 பில்லியன் மதிப்புள்ள ஒரு முக்கிய முதலீடாகும்.

இந்த 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடம், 20 நிலையங்கள் வழியாக ஜோஹான் செத்தியா மற்றும் பண்டார் உத்தாமாவை இணைக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.