கரகாஸ், ஜூன் 27 - வெனிசுவாலாவை அடுத்தடுத்து உலுக்கிய இரு நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. காயமடைந்தோர் எண்ணிக்கை 3,360-ஆக உயர்ந்திருக்கிறது.
நூற்றுக்கணக்கான அனைத்துலக மீட்பு பணியாளர்கள் வெனிசுவாலா வந்தடைந்திருக்கும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இன்னும் பலர் காணாமல் போயிருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என ஐயுறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை, சில நொடி இடைவேளையில் வெனிசுவாலாவை இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் புரட்டிப் போட்டன. அதில் இரண்டாவதாக பதிவாகிய 7.5 magnitude அளவிலான நிலநடுக்கம் கடந்த நூற்றாண்டில் அந்நாட்டை உலுக்கிய மிக வலுவான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.
அந்த இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, 214 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு நடப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodríguez) தெரிவித்தார்.







