கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியாவில் நீட் மறுதேர்வு

21 ஜூன் 2026, 8:40 AM
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியாவில் நீட் மறுதேர்வு

புது டில்லி,ஜூன் 21 - இந்தியாவில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் மறுதேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

வினாத்தாள் கசிவை அடுத்து மீண்டும் நடத்தப்படும் அதிக போட்டித்தன்மமை கொண்ட அந்த மறுதேர்வை நடத்த போலீசார் உட்பட 2 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.டெலிகிராம் செயலியின் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் அடையாளம், செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு காமிராக்கள், வினாத்தாள்களின் விநியோகத்தை GPS-தடங்காட்டி மூலமாக கண்காணித்தல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு வாரியம் எடுத்துள்ளது.

இந்திய மருத்துவ கல்லூரிகளுக்குத் தேர்வு பெற , கிட்டத்தட்ட ஒரு லட்சம் இடங்களுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

இவ்வேளையில், இதற்கு முந்தைய நீட் வினாத்தாள் கசிவுக்கு முக்கிய காரணமாக இருந்ததன் தொடர்பில் வேதியியல் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.