பாரிஸ், ஜூன் 21 - பி.எஸ்.எ ஸ்குவாஷ் தொடரின்( PSA Squash Tour Finals ) இறுதியாட்டத்தில் சிவசங்கரி பட்டத்தை வெல்லத் தவறினார்.
அவர் பாரிசில் நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்தின் முதல் நிலை ஆட்டக்காரர் ஹனியா எல் ஹம்மாமி-யிடம் 6-11,
11-10, 11-8, 11-8 என்ற புள்ளி எண்ணிக்கையில் தோல்வி கண்டார்.
அவ்வாட்டத்தில் கடும் போட்டியை வழங்கி முதல் இடத்தைப் பிடிக்கத் தவறினாலும், 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசியர் என்ற பெருமையை சிவசங்கரி பெற்றிருக்கிறார்.






