வீட்டில்  தீ இருவர் மயக்க நிலையில் மீட்பு

2 ஜூன் 2026, 5:35 AM
வீட்டில்  தீ இருவர் மயக்க நிலையில் மீட்பு

ஷா ஆலம், ஜூன் 2 - நேற்றிரவு ஜோகூர் பாரு, தாமான் எஹ்சான் ஜெயா, ஜாலான் எஹ்சான் ஜெயா 3/10-இல் அமைந்துள்ள இரண்டு மாடித் தொடர் வீடொன்று தீப்பிடித்ததில், அங்கிருந்த இருவர் மயக்க நிலையில் மீட்கப் பட்டனர்.

இரவு 9.06 மணியளவில் இது குறித்து அவசர அழைப்பு தங்களுக்கு வந்ததாக ஜோகூர் மாநில மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"ஜோகூர் ஜெயா, தெப்ராவ் மற்றும் கெம்பாஸ் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் (BBP) இருந்து, தீயணைப்பு மீட்பு வாகனம் (FRT), இலகுரக தீயணைப்பு மீட்பு வாகனம் (LFRT), அவசர மருத்துவக் குழு (EMRS) மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றுடன் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

"தீயணைப்புப் படையினர் இரவு 9.12 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்து, இரவு 10.05 மணியளவில் தீயைக் முழுமையாகக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இத் தீ விபத்தில் வீட்டின் 60 சதவீதப் பகுதி எரிந்து நாசமானது.

"வீட்டின் மேல் தளத்தில் பதின்ம வயதினர் என நம்பப்படும் இருவர் மயக்க நிலையில் இருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர்," என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிபிஆர் (CPR) எனப்படும் இருதய சுவாச மீட்பு சிகிச்சையை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.