ஷா ஆலாம், மே 30: சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சில பகுதிகளில் உரிமமின்றி லெமாங் (Lemang) விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) அபராதம் விதித்துள்ளது.
லெமாங் விற்பனை நடவடிக்கைகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதையும், வியாபாரிகள் உரிம நிபந்தனைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்வதற்காக, உரிமம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறையால் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக MPAJ தெரிவித்தது.
"சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட இந்த அபராத நடவடிக்கையானது, அமலில் உள்ள துணைச் சட்டங்களை அவர்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான ஒரு விழிப்புணர்வு மற்றும் அமலாக்க நடவடிக்கையாகும்," எனத் தனது முகநூல் (Facebook) பதிவில் MPAJ குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் சமூகத்தின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பேணிக் காக்கும் வகையில், வியாபாரிகள் தங்களது வணிக நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என MPAJ தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
"வியாபாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, விவேகமான முறையிலான தொடர் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
லெமாங் விற்பனை கண்காணிப்பு தீவிரம்: உரிமமில்லாத வியாபாரிகளுக்கு MPAJ அபராதம்
30 மே 2026, 4:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் டிங்கி தடுப்பு நடவடிக்கை; 24 அபராதங்கள் விதிப்பு
Media Selangor Team
17 ஆகஸ்ட் 2026

selangor
சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் ; ஊராட்சி மன்றங்கள் விரைந்து செயல்பட வேண்டும்
Dewi Abdul Rahman
8 ஆகஸ்ட் 2026

selangor
20 ஆண்டுகளாக நீடித்த தாசிக் பெர்மாய் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
Shalini Rajamogun
27 ஜூலை 2026

selangor
MPAJ வீடு வீடாகச் சென்று நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்கிறது
Latchumy Ramamoorthy
5 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



