இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புத்தக வவுச்சர் விநியோகம் விரைவில் செயல்படுத்தப்படும் - கல்வி அமைச்சு

29 மே 2026, 9:16 AM
இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புத்தக வவுச்சர் விநியோகம் விரைவில் செயல்படுத்தப்படும் - கல்வி அமைச்சு

புத்ராஜெயா, மே 29 - கல்வி அமைச்சின் (KPM) கீழ் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தக வவுச்சர்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இந்த முன்னெடுப்பு தொடர்பான விவரங்கள் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

"மாணவர்களின் மொழிப்புலமை மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில், வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடையே முன்னுரிமையாக மாற்றும் கல்வி அமைச்சின் முயற்சிக்கு இந்த முன்னெடுப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2026-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தக விழாவை (PBAKL) தொடக்கி வைத்தபோது, கல்வி அமைச்சின் கீழ்
இயங்கும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொது உயர்கல்வி நிலையங்களில் (IPTA) பயிலும் மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டுக்கான இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும், இன்று தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) 10 நாட்கள் நடைபெறும் PBAKL 2026 புத்தக விழாவில் இந்த வவுச்சர்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.