நியூயார்க்/லண்டன், மே 5: ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை மீட்க உதவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் முயற்சி, உலக எண்ணெய் சந்தையைத் தணிக்கத் தவறியதால், எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 109.84 அமெரிக்க டாலராக உயர்ந்தது என ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.
ஜூலை மாத விநியோகத்திற்கான வடகடல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு (159 லிட்டர்) 1.54 விழுக்காடு அதிகரித்துள்ளது.
"புராஜெக்ட் ஃப்ரீடம்" (Project Freedom) என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு ஏற்படும் எந்தவொரு இடையூறுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தின் மூலம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலடியாக, இன்று ஈரானிய இராணுவத் தலைமை தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஜலசந்தி வழியாகச் செல்ல விரும்பும் சரக்குக் கப்பல்கள், ஈரானிய ஆயுதப் படைகளுடன் தங்கள் இயக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஈரானின் மத்திய ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி அலியாபாடி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் திட்டத்தின் செயல்திறன் குறித்து வர்த்தகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளதால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கடந்த வாரம், உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு, எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, அதிகபட்ச அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு உதவ ட்ரம்ப் திட்டமிட்ட போதிலும், எண்ணெய் விலை உயர்வு
5 மே 2026, 1:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
Shalini Rajamogun
13 ஜூலை 2026

national
ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்: மலேசியாவின் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாக துணைப் பிரதமர் உறுதி
Shalini Rajamogun
13 ஜூலை 2026

antarabangsa
ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களை தற்காலிகமாக ஒத்திவைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புதல் - டொனால்ட் டிரம்ப்
Shalini Rajamogun
2 ஆகஸ்ட் 2026

antarabangsa
ஜோர்டானில் ஈரான் வான்வழி தாக்குதல்: 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்
Shalini Rajamogun
19 ஜூலை 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



