புத்ராஜெயா, மே 4: அரசாங்க செலவினங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளைப் பாதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
புதிய மருத்துவர்கள் மற்றும் தாதியர்களை நியமிப்பது, மருத்துவமனைகள் கட்டுவது போன்றவை பாதிக்கப்படாது என்றும், மாணவர் சேர்க்கையை சமாளிக்க புதிய வகுப்பறைகள் உட்பட பள்ளிகள் கட்டும் திட்டங்களும் திட்டமிட்டபடி தொடரும் என்றும் அவர் கூறினார்.
"மருத்துவர்கள், தாதியர்கள் நியமனம் பாதிக்கப்படாது, மருத்துவமனைகள் கட்டுவதும் பாதிக்கப்படாது, ஆனால் ஆடம்பரமான மருத்துவமனைகளின் திட்ட அளவைக் குறைக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.
மேலும், கல்வி அமைச்சின் செலவினங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய மாணவர் சேர்க்கைக்காகப் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி பாதிக்கப்படாது என்றும் அன்வார் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கத்தின் செலவின மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து உண்மைகளின் அடிப்படையில் இல்லாமல் அவசரமாக எதிர்வினையாற்றும் சில தரப்பினரின் போக்கை அன்வார் சாடினார்.
வெளிநாடுகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், ஆடம்பர ஹோட்டல்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் உண்மையான தேவைகளைத் தாண்டிய மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற மிதமிஞ்சியதாகக் கருதப்படும் செலவினங்களில் சேமிப்பு கவனம் செலுத்துகிறது என்று அன்வார் விளக்கினார்.
நாட்டில் நடத்தக்கூடிய கருத்தரங்குகள் உள்நாட்டிலேயே நடத்தப்படும் என்றும், செலவுகளைக் குறைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் தற்போது அமைச்சக வளாகங்களிலேயே நடத்த ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
"ஆடம்பர ஹோட்டல்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு, அமைச்சகங்களிலேயே நடத்தப்படுகின்றன. சாதாரண நிலையைத் தாண்டிய கட்டுமானப் பணிகளின் நோக்கம் குறைக்கப்படுகிறது," என்றார் அவர்.
உலகளாவிய விநியோக நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் மானியச் சுமைகள் போன்ற சவால்களுக்கு ஏற்ப, நிர்வாகச் செலவினங்களின் முன்னுரிமைகளை மறுசீரமைக்குமாறு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 29 அன்று நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.
மக்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்காக அரசாங்க வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு விவேகமான நிதி மேலாண்மை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
அரசாங்க செலவினங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளைப் பாதிக்காது
4 மே 2026, 6:39 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் - பிரதமர்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

national
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் நீண்டகால இடையூறுகள் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனே முக்கியம் - பிரதமர் அன்வார்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
டீசல் விலையைக் குறைக்க ஜூன் 1 முதல் ‘B15 பயோ டீசல்’ உற்பத்தி தொடக்கம்
Shalini Rajamogun
4 மே 2026

உங்கள் கருத்து என்ன?




