மணிலா, மே 3: மேயோன் எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை (PNP) அல்பே பகுதியில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாக்கவும், வெளியேற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் பிகோல் பிராந்தியத்தில் உள்ள காவல்துறை அலுவலகம் (PRO-5) அதிகாரிகளை நியமித்துள்ளதாக பிஎன்பி தலைவர் ஜெனரல் ஜோஸ் மெலென்சியோ நார்டேட்ஸ் ஜூனியர் கூறினார்.
"பேரிடர் மீட்பு நெறிமுறைகளைச் செயல்படுத்தவும், பாதிக்கப்பட்ட சமூகங்களில் காவல்துறையினரின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தவும் போதுமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் வளங்களைத் திரட்டியுள்ளோம். தேவைப்பட்டால் மேலும் பலரை அனுப்புவோம்," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரின் உத்தரவுக்கு இணங்க, குறிப்பாக ஆபத்தான மண்டலங்களுக்குள் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாம்பல் மழையால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் மற்றும் மேலும் எரிமலை வெடிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காரணமாக உள்ளூராட்சி அரசு பிரிவுகளும் (LGU) உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறைப் பிரிவுகள் முகக்கவசங்களை விநியோகித்து வருவதுடன், மக்கள் வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளன.
"களத்தில் சரியான நேரத்தில் மற்றும் திறமையான ஆதரவை வழங்க, உள்ளூராட்சி அரசு பிரிவுகள் மற்றும் பேரிடர் மீட்பு நிறுவனங்களுடன் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், தடைசெய்யப்பட்ட மண்டலங்களை அமல்படுத்தவும், மேயோனின் எரிமலைச் செயல்பாடு தொடரும் வரை விழிப்புடன் இருக்குமாறும் பிஎன்பி தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது," என்று நார்டேட்ஸ் கூறினார்.
ஆறு கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஆபத்தான மண்டலத்திற்குள் நுழையக் கூடாது என்ற தடையை பிஎன்பி கடுமையாக அமல்படுத்தி வருகிறது.
அவசரகால மீட்புப் பணிகளுக்கான தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, PRO-5 முக்கிய சாலைகளில் போக்குவரத்து அமலாக்க அதிகாரிகளையும் நிலைநிறுத்தியுள்ளது.
மயோன் எரிமலை சீற்றம்: பாதுகாப்பு பணிகளைப் பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தீவிரப்படுத்தியது
4 மே 2026, 1:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மலேசியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
Shalini Rajamogun
13 ஜூன் 2026

video
Anwar minta hentikan kontroversi diesel ke Filipina
Kathiravan Manoharan
14 ஏப்ரல் 2026

antarabangsa
ரகாசா சூறாவளி பிலிப்பைன்ஸ், தைவான், ஹாங்காங் நோக்கி நகர்கிறது
Rajah Ramaya
22 செப்டெம்பர் 2025

antarabangsa
இந்தோனேசியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெடித்த இரு எரிமலைகள்
Shalini Rajamogun
29 ஜூன் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



