அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுத்தவர்கள்  கைது

2 மே 2026, 3:40 AM
அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுத்தவர்கள்  கைது

புத்ராஜெயா, மே 2: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு வெளிநாட்டு ஆடவர்களை இன்று அதிகாலை போலீசார் தடுத்து வைத்தனர்.

சமூக ஊடகங்களில் பரவலான காணொளியில் விமான நிலையப் பகுதியில் பிச்சை எடுப்பதாக காட்டப்பட்ட நபர்கள்தான் 28 மற்றும் 45 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் என நம்பப் படுவதாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். ரவி கூறினார்.

விசாரணையில், தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அவ்விரு சந்தேக நபர்களிடமும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

"விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை அணுகி, அனுதாபத்தை ஈர்த்து பணம் கேட்பதே இவர்களின் செயல்பாட்டு முறையாகும்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வழக்கு குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.