புத்ராஜெயா, மே 2: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு வெளிநாட்டு ஆடவர்களை இன்று அதிகாலை போலீசார் தடுத்து வைத்தனர்.
சமூக ஊடகங்களில் பரவலான காணொளியில் விமான நிலையப் பகுதியில் பிச்சை எடுப்பதாக காட்டப்பட்ட நபர்கள்தான் 28 மற்றும் 45 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் என நம்பப் படுவதாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். ரவி கூறினார்.
விசாரணையில், தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அவ்விரு சந்தேக நபர்களிடமும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
"விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை அணுகி, அனுதாபத்தை ஈர்த்து பணம் கேட்பதே இவர்களின் செயல்பாட்டு முறையாகும்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுத்தவர்கள் கைது
2 மே 2026, 3:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
KLIA-வில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சீனப் பெண்ணுக்கு மனநலப் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம்
Media Selangor Team
19 ஆகஸ்ட் 2026

national
விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு அமைச்சரவை உத்தரவு
Bernama
5 ஆகஸ்ட் 2026

national
KLIA விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் கைது: புக்கிட் அமான்
Shalini Rajamogun
4 ஆகஸ்ட் 2026

national
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய சட்டவிரோத விமான நிலைய டாக்ஸி ஓட்டுநர் கைது
Pakiya
8 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



