ஷா ஆலம், ஏப்ரல் 28: மாநில அரசு ஏற்பாடு செய்த சிலாங்கூர் ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் ரிம 10,000 முதல் ரிம 12,999 வரையிலான அதிகபட்ச சம்பள சலுகைகள் பதிவாகியுள்ளதாக மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
இத்திட்டம் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குறிப்பாக சில துறைகளில் திறமையும் அனுபவமும் உள்ளவர்களுக்கு உயர் சம்பளத்தில் வேலை வாய்ப்புகளைத் திறந்துள்ளதை இது காட்டுகிறது என்று வீ. பாப்பாராய்டு கூறினார்.
"இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோல லங்காட்டில் நடைபெற்ற முதல் ஜோப்கேர் நிகழ்ச்சியில் 567 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 289 பேர் நேரில் கலந்து கொண்டனர். இதில், 119 பேர் வேலையைப் பெற்றனர், மேலும் 51 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் 30 முதலாளிகள் பங்கேற்றனர்," என அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து குறிப்பிட்ட திறன்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் குறுகிய காலப் படிப்புகளை மாநில அரசு வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஸ் எழுப்பிய இந்து அறநிலைய வாரியம் அமைப்பது தொடர்பான பரிந்துரை குறித்து பேசிய அவர், அந்த முயற்சியை மாநில அரசு வரவேற்பதாகக் கூறினார்.
"கோயில்கள், கல்லறைகள், இடமாற்றப் பிரச்சனைகள் மற்றும் சிலாங்கூரில் இந்து சமயம் தொடர்பான விவகாரங்கள் உட்பட இந்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்த இந்த வாரியம் உதவும்.
"இருப்பினும், சட்டம், நில உரிமை நிலை, நிர்வாக அதிகார வரம்பு மற்றும் சமூக உணர்திறன், குறிப்பாக தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை கவனமாக ஆராய வேண்டும்.
"பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம், ஆனால் சிலாங்கூரில் அதன் அமலாக்கம் மாநில நிர்வாக அமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூர் ஜோப்கேர் திட்டத்தின் மூலம் அதிக ஊதியம் தரும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன
28 ஏப்ரல் 2026, 1:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உலு லங்காட் ஜோப்கேர் (JobCare) வேலைவாய்ப்புச் சந்தை: நாளை அம்பாங்கில் ஏற்பாடு
Shalini Rajamogun
26 ஜூன் 2026

selangor
சிலாங்கூரில் பல்வேறு துறைகளில் 160,566 வேலை காலியிடங்கள் தயார்
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
RS- 2 திட்டம் சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஊடுருவ உதவுகிறது
Sofia Nasir
6 ஆகஸ்ட் 2026

selangor
RS-1இன் வறுமை ஒழிப்பு முன்னெடுப்புகள் RS-2 திட்டத்திலும் தொடரும் – பாப்பாராய்டு
Shalini Rajamogun
27 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?




