ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் முழுவதும் 662 வீடமைப்புத் திட்டங்களில் உள்ள 117,746 மனைகளுக்கு இன்னும் அடுக்குமாடி சொத்துரிமை (hak milik strata) வழங்கப்படவில்லை என்று வீடமைப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் (LPHS), குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களில் சம்பந்தப்பட்ட திட்டங்களைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
"செயலிழந்த, கண்டுபிடிக்க முடியாத அல்லது தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய மேம்பாட்டாளர்களின் வழக்குகளில், மாநில அரசு கட்டிட ஆணையர் (COB) மூலம் ஒரு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, அடுக்குமாடி சொத்துரிமைச் சட்டம் 1985 (சட்டம் 318) மற்றும் அடுக்குமாடி மேலாண்மைச் சட்டம் 2013 (சட்டம் 757) ஆகியவற்றின் கீழ் வீட்டு உரிமையாளர்கள் மேம்பாட்டாளரின் பங்கை ஏற்க வழிவகை செய்கிறது."
"கூட்டு நிர்வாகக் குழு (JMB) இல்லாத பட்சத்தில், கட்டிட ஆணையர் (COB) உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு தற்காலிக நிர்வாகக் குழுவை (MC Pro-Tem) அமைத்து, ஆவணங்களை நிர்வகிப்பதற்கும் நில அலுவலகத்தில் அடுக்குமாடி சொத்துரிமை விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கும் உதவலாம்," என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில், ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி எழுப்பிய அடுக்குமாடி சொத்துரிமைப் பிரச்சினைகள் தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், சிலாங்கூர் அடுக்குமாடி நிதி (Dana Strata Selangor - DSS) பற்றிய தகவல்களை மக்களிடையே பரப்ப, LPHS ஒரு சிறப்புப் பயிலரங்கை ஏற்பாடு செய்யும் என்றும் போர்ஹான் தெரிவித்தார்.
இந்தத் தகவல் திறம்படச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மக்கள் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்கள் (PBT) மற்றும் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் இந்தப் பயிலரங்கு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"மேம்பாட்டாளரின் ஈடுபாடு இல்லாவிட்டாலும் விண்ணப்பங்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்ய, அடுக்குமாடித் திட்டங்களைத் தயாரித்தல், நில அளவைக் கட்டணங்கள் மற்றும் தொழில் முறைக் கட்டணங்கள் போன்ற தொடர்புடைய செலவுகளை ஈடுகட்ட DSS-இன் பங்கு பயன்படுத்தப்படலாம்," என்றார் அவர்.
DSS என்பது கடந்த ஆண்டு மே 30-ஆம் தேதி தொடங்கப்பட்ட RM 10 மில்லியன் மதிப்புள்ள சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும். இது குறிப்பாக பழைய வீடமைப்புத் திட்டங்களில் தாமதமாகி வரும் அடுக்குமாடி சொத்துரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
LPHS-ஆல் நிர்வகிக்கப்படும் இந்த நிதி, சிக்கலில் உள்ள 130,000-க்கும் மேற்பட்ட மனைகளை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் நில அளவைத் திட்டங்கள் மற்றும் சட்ட விவகாரங்கள் போன்ற தொழில் நுட்பச் செலவுகளையும் உள்ளடக்கியது.
சிலாங்கூர் முழுவதும் 662 வீடமைப்புத் திட்டங்களில் உள்ள 117,746 மனைகளுக்கு இன்னும் அடுக்குமாடி சொத்துரிமை (hak milik strata) வழங்கப்படவில்லை
22 ஏப்ரல் 2026, 9:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor umum 15 lagi inisiatif, RM355.06 juta perkukuh daya tahan ekonomi
Kathiravan Manoharan
19 ஜூன் 2026

selangor
சிலாங்கூர் மாநிலப் புத்தாக்க விருது - பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
8 ஜூன் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை இன்று ஆறு இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
8 ஜூன் 2026

national
அனைத்துப் பகுதி மக்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியா சிலாங்கூர் தீவிரம்
Shalini Rajamogun, Nazli Ibrahim
7 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



