ஷா ஆலம், ஏப்ரல் 21: சிலாங்கூரில் 2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், RM185.04 பில்லியன் மதிப்புள்ள 4,569 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறுகையில், இந்தத் திட்டங்கள் உற்பத்தி, கட்டுமானம், விவசாயம், சேவைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளை உள்ளடக்கியுள்ளன என்றார்.
"இந்த மொத்த முதலீட்டுத் தொகையில், RM124.09 பில்லியன் உள்நாட்டு முதலீடாகவும், RM60.96 பில்லியன் வெளிநாட்டு முதலீடாகவும் உள்ளது," என்று இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பாண்டாமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் டக் சீயின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.
இதற்கிடையில், உள்ளூராட்சிக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம், கிள்ளான் துறைமுகம், பண்டார் சுல்தான் சுலைமான் தொழில்துறைப் பகுதியில் சட்டவிரோத தொழிற்சாலைகள் எதுவும் செயல்படவில்லை என்று தெரிவித்தார்.
அனுமதியின்றி இயங்கிய 10 தொழிற்சாலைகள் (KTK) கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், அவற்றில் ஏழு தொழிற்சாலைகளுக்கு திட்டமிடல் அனுமதி (KM) மூலம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
"சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறாத மீதமுள்ள மூன்று தொழிற்சாலைகள் மீது சட்ட விதி 172-இன் கீழ் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்று செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷீத் அசாரியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
"பண்டார் சுல்தான் சுலைமான் மற்றும் கிள்ளான் மாநகராட்சி மன்றத்தின் (MBDK) நிர்வாகப் பகுதிகளில் பகுதி அதிகாரிகள் மற்றும் அமலாக்க உறுப்பினர்களால் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.
மேலும், சட்டவிரோத தொழிற்சாலை வளாகங்களைக் கண்காணிக்க MBDK தொழில்நுட்ப மற்றும் அமலாக்கத் துறைகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நடவடிக்கைக் குழுவை (JForce) அமைத்துள்ளது என்றும் செகின்ச்சான் சட்டமன்ற உறுப்பினருமான சூ லிம் குறிப்பிட்டார்.
"நகராட்சி சேவைகளின் அடிப்படையில், சுகாதாரம், உரிமம், அமலாக்கம் மற்றும் வளர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது."
"மேலும், விதிகளை மீறும் வளாகங்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் முழுமையான நடவடிக்கையை எடுக்கும், மேலும் விதிக்கப்படும் அபராதங்களுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது," என்றார் அவர்.
சிலாங்கூரில் 185.04 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 4,569 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல்
21 ஏப்ரல் 2026, 10:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜெராமில் இரு சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது சோதனை- கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் நடவடிக்கை
Mavitthran
21 நவம்பர் 2025

selangor
சிலாங்கூர் மாநிலப் புத்தாக்க விருது - பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
8 ஜூன் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை இன்று ஆறு இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
8 ஜூன் 2026

national
அனைத்துப் பகுதி மக்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியா சிலாங்கூர் தீவிரம்
Shalini Rajamogun, Nazli Ibrahim
7 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



