கிளந்தான், கோல கிராய், கம்போங் மியாக்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனையில், ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரித்தா ஹரியான் அறிக்கையின்படி, பொதுப் பணிப் படையின் (PGA) 8 வது பட்டாலியன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர், ‘ஓப்ஸ் பெர்செபாடு கசானா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாலை 6.45 மணியளவில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
பொதுப் பணிப் படையின் தென்கிழக்கு பிரிகேட் தளபதி, மூத்த உதவி ஆணையர் அஹ்மத் ராட்ஸி ஹுசைன், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் பாகங்களைச் சேமித்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்தச் சோதனை நடத்தப் பட்டதாகக் கூறினார்.
“இந்தச் சோதனை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) மற்றும் வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு வகையான ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.”
“அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றார் அவர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேக நபரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைமையகத்திற்கு (IPD) கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்த பெண்மணி கைது: பொது பாதுகாப்புப் படையினர் அதிரடி
21 ஏப்ரல் 2026, 1:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
சுக்மா 2026 : சிறிய அளவிலாவது போட்டிகளை நடத்த கிளந்தான் அரசு கோரிக்கை
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு மார்ச் 19 பொது விடுமுறை - கிளந்தான் மாநில அரசு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

national
கோத்தா பாரு சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன
Shalini Rajamogun
15 மார்ச் 2026

national
கோல கிராய் மற்றும் தானா மேரா மாவட்டங்களில் RM2.6 மில்லியன் மதிப்புள்ள வரி செலுத்தப்படாத கடத்தல் சிகரெட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்
Pakiya
14 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




