ஷா ஆலம், ஏப்ரல் 20: 'லாங்குவேஜ் டிஸ்கவரி @ சிலாங்கூர் பொது நூலகம்' திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டுக்கான அடிப்படை மொழி வகுப்புகளின் 5-ஆம் பருவத்திற்கான பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) ஏற்பாடு செய்துள்ள இந்தத் திட்டம் தமிழ், அரபு, ஸ்பானிஷ் மற்றும் மாண்டரின் ஆகிய நான்கு மொழித் தேர்வுகளை வழங்குகிறது.
மாநில அரசின் மானிய உதவியுடன் சிலாங்கூர் குடிமக்களுக்காகப் பிரத்தியேகமாக இந்த வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்களிடையே மொழி கற்றலை ஊக்குவிக்கும் முயற்சியாக இது அமைகிறது.
ஏற்கனவே 'லாங்குவேஜ் டிஸ்கவரி' கணக்கைப் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆர்வமுள்ளவர்கள் www.ppas.gov.my/language_discovery என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் அல்லது மேலும் தகவலுக்கு 016-206 4264 மற்றும் 011-5879 1664 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
முன்னதாக, மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பன்மொழித் திறனை வலுப்படுத்தவும், மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் இந்த ஆண்டு முதல் இணையம் வழி இலவச வெளிநாட்டு மொழி வகுப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
மொழி என்பது உலக அரங்கில் மலேசியா போட்டியிட உதவும் ஒரு பலமே தவிர, பிளவுக்கான காரணம் அல்ல என்ற மாநில அரசின் நம்பிக்கையை இந்த அணுகுமுறை நிரூபிக்கிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த ரிம500,000 சிறப்பு ஊக்கத்தொகையைக் கடந்த வாரம் அவர் அறிவித்தார்.
சிலாங்கூர் இலவச மொழி வகுப்புகள்: பருவம் 5-க்கான பதிவு தொடக்கம்
20 ஏப்ரல் 2026, 1:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரின் இலவச மொழி வகுப்பு மீண்டும் தொடங்குகிறது, ஆறாவது அமர்வுக்கான பதிவு திறக்கப்பட்டுள்ளது
Shalini Rajamogun
5 ஜூன் 2026

selangor
இலவசக் காலை உணவுத் திட்டம்: சிலாங்கூரில் ஆகஸ்ட் முதல் 120,000 மாணவர்கள் பயன் பெறுவர்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
16 ஜூன் 2026

selangor
5,000 பேருக்கு 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் நிதியுதவி வழங்கியது எம்பிஐ அறக்கட்டளை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

selangor
இளையோர் சமூகத்தை மேம்படுத்த RS-2 திட்டத்தில் புதிய அணுகுமுறைகள் அறிமுகம்
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



