ஷா ஆலாம், ஏப்ரல் 19: சண்டக்கானில் உள்ள கம்போங் பாஹாகியா நீர் கிராமத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 200 வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன.
இது குறித்து அதிகாலை 1.32 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், உடனடியாக ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சண்டக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜிம்மி லாகுங் தெரிவித்தார்.
கினபாத்தாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் உட்பட மொத்தம் 35 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வரை தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
"குறுகிய பாதைகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குள் நுழைவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன. மேலும், கடல் நீர் வற்றியிருந்ததால், தீயை அணைப்பதற்குத் தேவையான நீரைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது," என்று அவர் பெர்னாமா செய்திக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் வீடுகள் நெருக்கமாக அமைந்திருந்ததால் தீ வேகமாகப் பரவி, அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளை அழித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.
சண்டாக்கான், கம்போங் பாஹாகியா, தீவிபத்தில் 200 வீடுகள் நாசம்
19 ஏப்ரல் 2026, 3:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சண்டாகானில் தீ விபத்து: 84 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்
Shalini Rajamogun
19 மே 2026

national
சண்டாக்கான் தீ விபத்து: பேரிடர் நிலை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது – மாவட்டப் பேரிடர் மேலாண்மை குழு
Shalini Rajamogun
6 மே 2026

national
கம்போங் பஹாகியாவில் சுமார் 1,000 வீடுகளைச் சாம்பலாக்கிய தீ ஒரு மசூதி'யை மட்டும் சேதமடையாமல் விட்டுவைத்தது எப்படி?
Pakiya
26 ஏப்ரல் 2026

national
சண்டாக்கான் தீ விபத்து: மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் சிறப்பு உதவி – கல்வி அமைச்சு நடவடிக்கை
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



