தொலைத்தொடர்பு கோபுர சாதனங்களைத் திட்டமிட்டுத் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது

18 ஏப்ரல் 2026, 6:00 AM
தொலைத்தொடர்பு கோபுர சாதனங்களைத் திட்டமிட்டுத் திருடியதாக சந்தேகிக்கப்படும்  ஆறு பேர்  கைது
தொலைத்தொடர்பு கோபுர சாதனங்களைத் திட்டமிட்டுத் திருடியதாக சந்தேகிக்கப்படும்  ஆறு பேர்  கைது

தொலைத்தொடர்பு கோபுர சாதனங்களைத் திட்டமிட்டுத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் நீலாய் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலாய் ஸ்பிரிங், வில்லா தேசா காசியா, பண்டார் பாரு நீலாயில் உள்ள சயின்ஸ் நீர்த் தாங்கியில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.

நேற்று மாலை 7.15 மணியளவில் சம்பவம் குறித்த தகவல் நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்திற்கு (IPD) கிடைத்ததாக அவர் கூறினார்.

"பரிசோதனையில், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான 'ரிமோட் ரேடியோ யூனிட்' (RRU) கூண்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் இருந்த பல உபகரணங்கள் காணாமல் போயிருந்தன, அவை திருடப்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் கூறினார்.

"தகவலின் பேரில் செயல்பட்ட காவல்துறைக் குழு, அன்றிரவு முதல் அதிகாலை வரை நீலாய் மற்றும் மந்தின் பகுதிகளில் பல இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி, ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்தது. கைதான உள்ளூர்வாசிகள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்," என்றார்.

ஹுவாவே ஆர்.ஆர்.யூ (Huawei RRU) மற்றும் 'குவாட் பேண்ட் காம்பைனர்' (Quad Band Combiner) உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் வாகனங்களையும் காவல்துறை பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

"சோதனையில், சந்தேக நபர்களில் பெரும்பாலானோருக்கு திருட்டு, கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் சம்பந்தப்பட்ட பழைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்தது."

"இந்தக் குழு, பழைய இரும்பாக விற்பதற்காக உதிரிப்பாகங்களைக் கழற்றித் திருடுவதை திட்டமிட்டுச் செய்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்றார் அவர்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 457-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் அனைவரும் தடுப்புக் காவலுக்காக சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களிடம் இது குறித்து தகவல் ஏதேனும் இருந்தால் 06-7904222 என்ற எண்ணில் நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தை அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.