மேற்கு ஆசிய மோதலின் தாக்கங்களை எதிர்கொள்ள, எரிசக்தி ஆதாரங்களைச் சிலாங்கூர் பன்முகப்படுத்துகிறது

16 ஏப்ரல் 2026, 9:31 AM
மேற்கு ஆசிய மோதலின் தாக்கங்களை எதிர்கொள்ள, எரிசக்தி ஆதாரங்களைச் சிலாங்கூர் பன்முகப்படுத்துகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 16: மேற்கு ஆசிய மோதலினால் மக்கள் மற்றும் மாநில செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், சிலாங்கூர் தனது எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும், பொருளாதாரத் திறனை வலுப்படுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சூரிய சக்தி அமைப்பு, கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் ஹைட்ரஜன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

மேற்கு ஆசிய மோதல் குறித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், வெளிநாட்டு அழுத்தங்கள் இருந்தபோதிலும் மாநிலத்தின் செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதிசெய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"மாநில அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"அவற்றில், மாநில அரசு கட்டிடங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் மின்கல தொழில்நுட்பத்துடன் கூடிய சூரிய சக்தி அமைப்புகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும் அடங்கும்," என்று அவர் கூறினார்.

"ஜெராம் மற்றும் தஞ்சோங் டுவா பிலாஸில் கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் ஆலைகளை நாங்கள் தொடங்குவோம். இதன் மூலம், கழிவு சேகரிப்பு மற்றும் மேலாண்மை மூலம் எரிசக்தியை உருவாக்க முடியும். இனி குப்பை கொட்டும் இடங்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை," என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.