வெள்ளம் மற்றும் சாலைப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் - கோலா லங்காட் நகராண்மை கழகம்

15 ஏப்ரல் 2026, 6:31 AM
வெள்ளம் மற்றும் சாலைப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் -  கோலா லங்காட் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஏப்ரல் 15 – கோலா லங்காட் நகராண்மை கழக (MPKL) நிர்வாகப் பகுதிகளில் நிலவும் வெள்ளம், சாலை மற்றும் நிலச்சரிவு தொடர்பான பிரச்சனைகள் மக்களின் நலன் கருதி முழுமையாகக் கையாளப்படும்.

இப்பிரச்சனைகள் குறித்து நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை, பொதுப்பணித் துறை போன்ற தொழில்நுட்ப அமைப்புகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக உள்கட்டமைப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.

"தெளிவான கண்ணோட்டத்தையும், மிகச் சிறந்த தீர்வுகளையும் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக, எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்சனையும் விவாதிக்கப்படுவதோடு நின்றுவிடாமல், தெளிவான மற்றும் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளால் தொடரப்படும்," என்றார்.

"மக்களின் நலத்தையும், சிலாங்கூரின் நீடித்த வளர்ச்சியையும் உறுதி செய்வதற்காக இந்த தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, மக்களின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்கட்டமைப்பு பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காக இஷாம், கோலா லங்காட் நகராண்மைக் கழகத்துடன் ஒரு பணிமுறைப் பயணம் மற்றும் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், திடக்கழிவு மேலாண்மை, வெள்ளப் பேரிடர் மற்றும் சாலை உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று மந்திரி புசார் நினைவூட்டியிருந்தார்.

2025-ஆம் ஆண்டு முழுவதும் மாநில அரசு குறிப்பிடத்தக்க வருவாய் சாதனையைப் பதிவு செய்துள்ளதற்கு ஏற்ப இந்த வலியுறுத்தல் அமைந்துள்ளது என்று டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.