கோத்தா பாரு, ஏப்ரல் 13: பள்ளி ஒன்றின் வளாகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வாகனம் மோதியதாக நம்பப்படும் சம்பவத்தில், படிவம் ஒன்று மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அத்தை, 43 வயதான ஸுரைஃபா நூர் கூறுகையில், 13 வயதான நூர் பாதிமாத்துல் ஹவா முகமட் அஸாவுதீனையும், அதே பள்ளியில் பயிலும் அவரது சகோதரர் 15 வயதான முகமட் அலி முஸ்தாக்கிமையும் அழைத்துச் செல்வது தனது தினசரி வழக்கம் என்றும், ஆனால் நேற்று அவர்கள் காருக்கு வரத் தாமதமானதாகவும் தெரிவித்தார்.
"திடீரென, தனது தங்கை இறந்துவிட்டதாக முகமட் அலி முஸ்தாக்கிம் என்னிடம் தெரிவித்தார். நான் அதிர்ச்சியடைந்து, உடனடியாக சூராவுக்கு (சம்பவம் நடந்த இடமாக நம்பப்படுகிறது) விரைந்தேன்," என்று அவர் குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக சிறப்பு மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பள்ளி சூராவில் ஜுஹர் தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியபோது, நூர் பாதிமாத்துல் ஹவா மீது வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் தாயாரும், தனது சகோதரியுமான சித்தி மஹேரான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததிலிருந்து, மறைந்த மாணவியைத் தானே கவனித்து வருவதாக ஸுரைஃபா கூறினார்.
இச்சம்பவத்தை கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் அஸ்மிர் டமிரி உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, 43 வயதான முகமட் அஸாவுதீன் அப்துல்லா, கம்போங் செப்பாவில் பணியில் இருந்தபோது ஸுரைஃபா தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்ததாகக் கூறினார்.
"பள்ளிக்கு வரும் வரை எனக்கு உண்மை என்னவென்று தெரியாது. பள்ளிக்கு வந்தவுடன், நேராக சூராவ் பகுதிக்குச் சென்றேன். அங்கே எனது மகள் அசைவற்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்," என்ற அவர், தனது மகளுக்கு உரிய நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது மகளின்உடலை தஞ்சோங் மாஸ் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளி வளாகத்தில் வாகனம் மோதியதில் மாணவி உயிரிழப்பு
13 ஏப்ரல் 2026, 1:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
முதலாம் ஆண்டு மாணவனை அடித்த பள்ளித் தலைமையாசிரியர் கைது
Shalini Rajamogun
15 மார்ச் 2026

national
இரு மாணவிகள் மீது கார் மோதிய சம்பவம் - ஆசிரியர் தடுப்புக் காவலுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார்
Shalini Rajamogun
13 ஏப்ரல் 2026

national
பேருந்து பயணத்தின் போது மூதாட்டி திடீர் மரணம்
Shalini Rajamogun
8 ஏப்ரல் 2026

national
தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
Shalini Rajamogun
27 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




