ஷா ஆலம், ஏப்ரல் 10: நேற்று, பண்டார் பாரு நீலாய் மற்றும் ரூமா ராக்யாட் நீலாய் பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் ஆயுதம் ஏந்திய இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேக நபர்கள் கத்தி மற்றும் பாராங்கத்திகளைப் பயன்படுத்தியதாக நீலாய் மாவட்டக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
"முதல் சம்பவம் அதிகாலை 1.10 மணியளவில் பண்டார் பாரு நீலாய், ஜாலான் பிபிஎன் 1/2F-இல் உள்ள 24 மணி நேர பல்பொருள் விற்பனை கடையில் நிகழ்ந்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"ஆரம்பகட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத இருவர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கத்தியை வைத்திருந்தார்," என்று ஜோஹாரி குறிப்பிட்டார்.
சந்தேக நபர் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஊழியரை மிரட்டியதாகவும், மற்றொரு சந்தேக நபர் சுமார் RM600 ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு வகையான சிகரெட் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாவது சம்பவம் இரவு 9.48 மணியளவில் ரூமா ராக்யாட் நீலாய் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை உள்ளடக்கி நிகழ்ந்ததாகக் ஜோஹாரி கூறினார்.
"இந்தச் சம்பவத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், பாராங்கத்தியைக் காட்டி மிரட்டி, பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரொக்கப் பணம், வங்கி அட்டைகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்."
"பாதிக்கப்பட்டவர் தனது கைப்பையைத் தக்கவைக்க முயன்றபோது, அவரது விரலில் சிறு காயம் ஏற்பட்டது. இழப்பு RM2,000-க்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்றார்.
இவ்விரு வழக்குகளும் தண்டனைச் சட்டம் பிரிவு 395/397 மற்றும் பிரிவு 394-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
24 மணி நேரத்திற்குள் ஆயுதம் ஏந்திய இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் பதிவு
10 ஏப்ரல் 2026, 3:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
காவல்துறை அதிகாரியை நோக்கி இறைச்சி வெட்டும் கத்தியை வீசிய ஆடவர் கைது
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

national
முதலீட்டு மோசடியில் சிக்கிய ஓய்வூதியதாரர், 3 இலட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை இழந்தார்
Shalini Rajamogun
29 மார்ச் 2026

national
பினாங்கில் 42 கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமான கும்பல் கைது
Shalini Rajamogun
10 மார்ச் 2026

national
உலு சிலாங்கூரில் மளிகைக் கடையின் முன் நகையைப் பறிக்க முயற்சி
Shalini Rajamogun
1 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




