எஸ்.பி.எம் தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு

9 ஏப்ரல் 2026, 1:10 AM
எஸ்.பி.எம் தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 9: 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் 10A-க்களுக்கு மேல் சிறந்த தேர்ச்சி பெற்ற 6,717 மாணவர்களுக்கும் 2026/2027 கல்வியாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கல்வி அமைச்சு (KPM) இடங்களை வழங்கும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இனம் மற்றும் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு
வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"அதே வேளையில், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான 90 விழுக்காடு பூமிபுத்ரா ஒதுக்கீடு பாதிக்கப்படாது; அது நிலைநிறுத்தப்படும்," என்று அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.