ஷா ஆலம், ஏப் 5, ; மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து நிச்சயமற்ற நிலைமைகள் நிலவினாலும், மலேசியா மற்றும் சிலாங்கூர் வருகை ஆண்டு 2026-ஐ முன்னிட்டு ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைவதில் சிலாங்கூர் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த உலகளாவிய நெருக்கடி, குறிப்பாக மேற்கு மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், சுற்றுலாக் கட்டமைப்பை வலுப்படுத்த முன்கூட்டிய நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் கூறினார்.
ஜப்பான், சீனா, தைவான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட அதிக ஆற்றல் கொண்ட ஆசிய சந்தைகளில் விளம்பரங்களை மையப்படுத்துவதே முக்கிய உத்திகளில் ஒன்று என்று டத்தோ இங் சூ லிம் கூறினார்.
அதோடு, சில சந்தைகளில் இருந்து ஏற்படும் பற்றாக்குறையைச் சமநிலைப்படுத்தும் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
"இந்த நெருக்கடியால் சில தாக்கங்கள் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். தொடர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் துல்லி-யமான இலக்குகள் மூலம், சில சந்தைகளில் இருந்து ஏற்படும் பற்றாக்குறையை எங்களால் ஈடுசெய்ய முடியும் என்று நம்புகிறோம்."
"சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கான பயணப்படை மூலம் சிலாங்கூர் மற்றும் மலேசியா வருகை ஆண்டு 2026 பிரச்சாரத்தை நாங்கள் தீவிரப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.
இங்குள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற மாட்டா கண்காட்சியின் (MATTA Fair) முக்கிய மேடையில் கிள்ளான் சுற்றுலாத் தொகுப்பைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மேற்கு ஆசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைய வாய்ப்புள்ளது குறித்து கருத்துரைத்த இங் சூ லிம், மற்ற சந்தைகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணி-களின் வருகையால் அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும் என்று தம் தரப்பு நம்புவதாகக் கூறினார்.
அனைத்துலக பயணப்படைத் தொடர்கள், சுகாதாரச் சுற்றுலா மற்றும் உணவுச் சுற்றுலா போன்ற துறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விளம்பர முயற்சிகள் இந்த அணுகுமுறைக்குத் துணைபுரிகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
"போர்ச் சூழலில் நிச்சயமாகத் தாக்கங்கள் இருக்கும், ஆனால் தொடர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் சரியான இலக்குகள் மூலம், குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் குழுவை மற்ற சந்தைகளைக் கொண்டு நாங்கள் மாற்றியமைக்க முடியும்," என்று அவர் கூறினார்.
மலேசியா மற்றும் சிலாங்கூர் வருகை ஆண்டு 2026-ஐ முன்னிட்டு ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை சிலாங்கூர் எட்டும்.
5 ஏப்ரல் 2026, 8:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஹஜ் மோசடி கும்பல், அனைத்துலக வலையமைப்பின் மூலம் மக்களை ஏமாற்றுகிறது
Pakiya
18 ஏப்ரல் 2026

national
மலேசியப் பயண முகவர்கள் சங்கத்தின் (மாட்டா) விழா வருகையாளர்களின் தேர்வாக உள்நாட்டு சுற்றுலாக்கள்.
Pakiya
5 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் 76 சட்டவிரோதக் குப்பைத் தளங்கள் இன்னும் செயல்படுகின்றன: அமலாக்கம் தீவிரம்
Media Selangor Team
9 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூரில் இதுவரை 72 சட்டவிரோதத் தொழிற்சாலைகள் இடிக்கப்பட்டன
Shalini Rajamogun
3 ஆகஸ்ட் 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



