எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய பந்திங் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

3 ஏப்ரல் 2026, 1:53 AM
எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய பந்திங் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 3: 2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய பந்திங் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டும் வகையில் ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத்தொகையைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

இளம் தலைமுறையினரைத் தொடர்ந்து வெற்றிபெற ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுவதாகப் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் கூறினார்.

"2025 எஸ்பிஎம் மாணவர்களின் முயற்சி மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இத்திட்டத்தைத் தொடர்கிறேன். சிறந்த மாணவர்கள் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க ஓர் ஊக்குவிப்பாக
இந்த நிதி உதவியைப் பெறுவார்கள்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

குறைந்தது 9A பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பந்திங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றும் அவர் கூறினார்.

விண்ணப்பதாரர்கள், மாணவரின் மைக்காட் நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மைக்காட் நகல் மற்றும் 2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஏப்ரல் 14-ஆம் தேதி ஆகும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.