ஷா ஆலம், ஏப்ரல் 3: 2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய பந்திங் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டும் வகையில் ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத்தொகையைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
இளம் தலைமுறையினரைத் தொடர்ந்து வெற்றிபெற ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுவதாகப் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் கூறினார்.
"2025 எஸ்பிஎம் மாணவர்களின் முயற்சி மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இத்திட்டத்தைத் தொடர்கிறேன். சிறந்த மாணவர்கள் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க ஓர் ஊக்குவிப்பாக இந்த நிதி உதவியைப் பெறுவார்கள்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
குறைந்தது 9A பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பந்திங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றும் அவர் கூறினார்.
விண்ணப்பதாரர்கள், மாணவரின் மைக்காட் நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மைக்காட் நகல் மற்றும் 2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஏப்ரல் 14-ஆம் தேதி ஆகும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய பந்திங் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
3 ஏப்ரல் 2026, 1:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
30 pelajar cemerlang SPM DUN Banting terima penghargaan
Kathiravan Manoharan
18 மே 2026

national
நாளை தொடங்கும் எஸ்.பி.எம். மறுதேர்வை 12,974 பேர் எழுதவுள்ளனர்
Shalini Rajamogun
13 ஜூலை 2026

selangor
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள SPM மாணவர்கள் இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
Latchumy Ramamoorthy
11 ஜூலை 2026

selangor
கோத்தா அங்கிரிக் தொகுதியைச் சேர்ந்த 367 சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பாராட்டு விழா
Shalini Rajamogun, Norrasyidah Arshad
24 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



