ஷா ஆலம், மார்ச் 31: பொது சுகாதாரம் மற்றும் தூய்மைக் கேடு அபாயங்களைக் கையாள அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஏஜே) எடுத்த உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து, பண்டான் இண்டா உணவு அங்காடி பகுதியில் அடைபட்டிருந்த கால்வாயை கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) சுத்தம் செய்துள்ளது.
அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் அமலாக்கப் பிரிவு மேற்கொண்ட கள ஆய்வில், அப்பகுதியில் உள்ள கால்வாய் அசுத்தமாகவும் அடைபட்டும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், நீரோட்டம் பாதிக்கப்பட்டது என்றும் எம்பிஏஜே தெரிவித்தது.
"இந்த நிலைமை பூச்சிகள் பெருகவும், சுற்றுப்புறத் தூய்மையைப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது."
"இதனைத் தொடர்ந்து, வடிகால் அமைப்பு மீண்டும் சீராகச் செயல்படுவதை உறுதி செய்யவும், தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்தச் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது," என்று எம்பிஏஜே அதன் முகநூல் பதிவில் தெரிவித்தது.
அதே வேளையில், இதே போன்ற பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க, வியாபாரிகளும் பொதுமக்களும் கழிவுகளைக் கால்வாயில் வீச வேண்டாம் என்றும் எம்பிஏஜே அறிவுறுத்தியுள்ளது.
இப்பகுதி தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், வளமாகவும் இருப்பதை உறுதிசெய்ய, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அது மேலும் வலியுறுத்தியது.
பொதுமக்கள் இது தொடர்பான புகார்கள் அல்லது தகவல்களை எம்பிஏஜே SISPAA அமைப்பு மூலமாகவோ அல்லது வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ தெரிவிக்கலாம்.









