மலேசியாவில் நீடிக்கும் வறண்ட வானிலை: முதியவர்களும் குழந்தைகளும் அபாயத்தில் உள்ளனர்

24 மார்ச் 2026, 7:29 AM
மலேசியாவில் நீடிக்கும் வறண்ட வானிலை: முதியவர்களும் குழந்தைகளும் அபாயத்தில் உள்ளனர்

ஷா ஆலம், மார்ச் 24: தற்போது நிலவும் மேடன்-ஜூலியன் அலைவின் (MJO) வறண்ட கட்டத்தினால், நாட்டின் வெப்ப நிலை மோசமடைந்து வருவதாகவும், இது முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பெரும் சுகாதார ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்த தரப்பினர் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நீரிழப்பைத் தவிர்க்கப் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடுகள்) திரு. அம்பூன் டிண்டாங்
அறிவுறுத்தியுள்ளார்.

"நீடித்த வெப்பமான காலநிலையால் இந்தக் குழுவினர் எளிதில் பாதிக்கப்படக்கூடும்," என்று அவர் ஆர்.டி.எம். செய்தியில் குறிப்பிட்டார்.

குறைந்த மழைப்பொழிவு காரணமாக அணைக்கட்டுகளின் நீர் மட்டங்களும், சுத்தமான நீர் விநியோகமும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

வெப்ப அலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் மூன்று நிலைகளாகப் பிரிக்கிறது. வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால் அது 'எச்சரிக்கை' நிலை என்றும், 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால் 'வெப்ப அலை' என்றும், 40 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் 'தீவிர வெப்ப அலை' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.