உரிமம் இன்றி இயங்கி வந்த மறுசுழற்சி மையம் ஒன்றில்  25 வெளி நாட்டினர் கைது

12 மார்ச் 2026, 3:46 AM
உரிமம் இன்றி இயங்கி வந்த மறுசுழற்சி மையம் ஒன்றில்  25 வெளி நாட்டினர் கைது

ஷா ஆலம், மார்ச் 12: கிள்ளான், காப்பார், ஜாலான் பெஸ்தாரியில் உரிமம் இன்றி இயங்கி வந்த மறுசுழற்சி மையம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 25 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 63 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களிடம் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் மற்றும் வேலை அனுமதி பத்திரங்கள் இல்லை என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

"கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவு (BPJKK), தெனகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து நேற்று மாலை 3.15 மணி அளவில் இந்தச் சோதனையை நடத்தியது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்த மையம், உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியின்றி சுமார் ஆறு மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

"இந்தச் சோதனையின் போது, ஒரு சிசிடிவி டெக்கோடர் சாதனம், இரண்டு நேரப் பதிவு இயந்திரங்கள் மற்றும் அதன் அட்டைகள், மற்றும் வளாகத்தின் பிரதான வாயிலுக்கான இரண்டு தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றையும் காவல்துறை பறிமுதல் செய்தது," என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வழக்கு, 1946ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பொருள் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 6, 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 55B, மற்றும் அதே சட்டத்தின் கீழ் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.