பொதுக் குப்பைத் தொட்டியில் வணிகக் கழிவுகளைக் கொட்டிய தனிநபருக்கு RM1,000 அபராதம்

24 பிப்ரவரி 2026, 6:20 AM
பொதுக் குப்பைத் தொட்டியில் வணிகக் கழிவுகளைக் கொட்டிய தனிநபருக்கு RM1,000  அபராதம்

ஷா ஆலம், பிப்ரவரி 24 — ஜாலான் அக்ரோடெக் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான பொதுக் குப்பைத் தொட்டியில், வணிக ரீதியிலான கழிவுகளைக் கொட்டிய நபருக்கு RM1000 அபராதம் விதிக்கப்பட்டது.

உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த அந்த பொதுக் குப்பைத் தொட்டியை, வணிகக் கழிவுகளை அகற்றுவதற்காகத் தவறாகப் பயன்படுத்தியது அருகில் உள்ள சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 இது குறித்து கோல லங்காட் நகராட்சி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தங்களின் குப்பைகளை அகற்றுவதற்குச் சொந்தமாகப் துப்புரவு ஒப்பந்தக்காரர்களை நியமிக்க வேண்டும் என்றும், குடியிருப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பொதுக் குப்பைத் தொட்டி வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

"வணிகர்கள் தங்களின் கழிவுகளை அகற்றத் தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களை வைத்திருக்க வேண்டும். பொதுக் குப்பைத் தொட்டிகள் குடியிருப்பாளர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே," என்று நகராட்சி மன்றம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 இந்த விதிமீறலில் ஈடுபட்ட நபருக்கு, 2007-ஆம் ஆண்டு கோல லங்காட் நகராட்சி மன்றத்தின் (குப்பைகளைச் சேகரித்தல், அகற்றுதல் மற்றும் அழித்தல்) துணைச் சட்டம் 4-ன் கீழ் குற்றச்சாட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது.

பொது வசதிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், அப்பகுதியின் தூய்மையைப் பராமரிக்கவும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் நகராட்சி மன்றம் தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.