பெட்டாலிங் ஜெயா,பிப் 23 - ஜாலான் ஸ்ரீ மஞ்சா மற்றும் என்.பி.இ நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு அடைபட்ட கால்வாய்கள், பராமரிப்பற்ற தனியார் தடுப்புக் குளம் மற்றும் அசாதாரண கனமழை ஆகியவையே முதன்மைக் காரணங்கள் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) தெரிவித்துள்ளது.
இரண்டு மணி நேரத்தில் பதிவான 182 மில்லிமீட்டர் அளவிலான மிக அதிகப்படியான மழையால் வடிகால் அமைப்புகள் திணறிய வேளையில், அருகில் உள்ள ஆற்று நீர் மட்டம் உயர்ந்ததால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் பின்னோக்கிப் பாய்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்ய பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் தங்கள் நிலத்திலுள்ள வடிகால் அமைப்புகளை உடனடியாகச் சீரமைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் 17 முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, நான்கு முக்கிய இடங்களில் நிரந்தர நீர் இறைக்கும் பம்புகளைப் பொருத்த வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திடம் 2 மில்லியன் ரிங்கிட் நிதி கோரப்பட்டுள்ளது.
சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப வடிகால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள மாநகராட்சி, பொதுமக்களும் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜாலான் ஸ்ரீ மஞ்சா வெள்ளம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விளக்கம்
23 பிப்ரவரி 2026, 5:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உணவகங்களின் தூய்மை பராமரிப்பில் மெத்தனம்: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை
Shalini Rajamogun, Sheeda Fathil
17 ஏப்ரல் 2026

selangor
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி திட்டமிடலில் இளம் உறுப்பினர்கள்
Shalini Rajamogun, Nadhirah Fattah
13 ஏப்ரல் 2026

selangor
மூத்த குடிமக்களுக்கான சூழலை வலுப்படுத்த தொழில்முறை பராமரிப்பாளர்களுக்கு எம்பிபிஜே பயிற்சி
Shalini Rajamogun, Ufairah Tarmidzi
9 ஏப்ரல் 2026

selangor
பொது வாகன நிறுத்துமிடங்களில் இடையூறாக இருந்த 20 பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பறிமுதல் செய்தது
Shalini Rajamogun
3 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




