ஜனவரி மாதத்தில் 481 தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவு

23 பிப்ரவரி 2026, 1:44 AM
ஜனவரி மாதத்தில் 481 தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், பிப். 23: இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 481 தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 46 சதவீத அதிகரிப்பாகும்.

இந்த வழக்குகள் மொத்தம் RM27 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.

“ஜனவரி 2025-ஐ ஒப்பிடுகையில், தொலைபேசி மோசடி சம்பவங்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இழப்புத் தொகை 58 சதவீதம் வரை உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இதனால், பொதுமக்கள் அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத நபர்களிடம் எந்தவொரு வங்கி அல்லது தனிப்பட்ட தகவல்களையும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் நிதி பரிவர்த்தனை செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் சரிபார்த்து கொள்ள வேண்டும்; இல்லையெனில் மோசடி கும்பல்களால் பாதிக்கப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.

மோசடி கும்பல்கள் பொதுவாக அமலாக்க அமைப்புகள், வங்கி அதிகாரிகள், கூரியர் நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களின் அதிகாரிகளாக போலி வேடமிட்டு மக்களைத் தொடர்பு கொள்கின்றனர்.

குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி, பதற்றத்தை உருவாக்கி, வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பெறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மோசடி தொடர்பான தகவல் அல்லது உறுதிப்படுத்தல்களுக்கு NSRC 997 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது semakmule.rmp.gov.my என்ற இணையதளத்தை நாடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.