கோலாலம்பூர், பிப் 16– வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாகப் பதிவாகியுள்ளது.
மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறுகையில், வடக்கு நோக்கிய பிளஸ் (E1) பாதையில், புக்கிட் பெருந்துங்கில் இருந்து புக்கிட் தாகார் வரையிலும், கோப்பெங்கிலிருந்து சிம்பாங் புலாய் வரையிலும், மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து கோல கங்சார் வரையிலும், சங்காட் ஜெரிங்கிலிருந்து தைப்பிங் உத்தாரா வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
"தெற்கு நோக்கிய திசையில், ஜாவியிலிருந்து பண்டார் பாரு வரையிலும், சுங்கையிலிருந்து சிலிம் ரிவர் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.
“பிளஸ் (E2) நெடுஞ்சாலையில், சுங்கை பேசி சுங்கச்சாவடியிலிருந்து நகர மையம் நோக்கியும், பண்டார் பாரு நிலாயிலிருந்து பண்டார் ஐன்ஸ்டேல் வரையிலும் போக்குவரத்து மெதுவாக உள்ளது. கிலோமீட்டர் 277-ல் நிகழ்ந்த விபத்தால் வலது பாதை தடைபட்டுள்ளதே இதற்குக் காரணம்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
தவிர, கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையிலும் கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வரையிலும், லஞ்சாங்கிலிருந்து பெந்தோங் நோக்கியும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கியுள்ள 50 விழுக்காடு சுங்கக்கட்டணத் தள்ளுபடியைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதால், இன்று நள்ளிரவு வரை அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று LLM எதிர்பார்க்கிறது.
“சுங்கக்கட்டணத் தள்ளுபடி இன்று இரவு 11.59 மணிக்கு முடிவடைவதால், குறிப்பாக பிளஸ் E1, E2 மற்றும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நள்ளிரவு வரை அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.
2026 சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அரசாங்கம் 50 விழுக்காடு சுங்கக்கட்டணத் தள்ளுபடியை அறிவித்திருந்தது. இந்தத் தள்ளுபடி பிப்ரவரி 14 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி, இன்று இரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது.
பொதுமக்கள் பிளஸ்லைனின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1-800-88-0000, எக்ஸ் தளம் @plustrafik, அல்லது LLM-இன் 1-800-88-7752 மற்றும் எக்ஸ் தளம் @llmtrafik மூலமாக அண்மைய போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.


