பள்ளி மாணவர் விடுதியில் பகடிவதை சம்பவம் - ஐந்தாம் படிவ மாணவர் கைது

13 பிப்ரவரி 2026, 9:35 AM
பள்ளி மாணவர் விடுதியில் பகடிவதை சம்பவம் - ஐந்தாம் படிவ மாணவர் கைது

ஷா ஆலம், பிப் 13: பகாங், பெந்தோங் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் விடுதி ஒன்றில், ஒன்றாம் படிவ மாணவரை சிகரெட் துண்டால் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆண் மாணவரின் மார்பில் தீக்காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். இச்சம்பவம் விடுதியின் கழிப்பறையில் நடப்பதாக நம்பப்படுகிறது.

“பாதிக்கப்பட்ட மாணவர் சிகரெட் புகைக்க மறுத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் விடுதி வார்டனிடம் சம்பவத்தை தெரிவித்த பின்னர் பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்,” என்று யஹாயா ஓத்மான் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பமும் சம்பவத்தைக் காவல்துறையிடம் புகார் செய்தனர். இதன் விளைவாக சந்தேக நபர் பள்ளி விடுதியில் கைது செய்யப்பட்டார்.

பல சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு குற்றச்சாட்டுப் பிரிவு 324 கீழ் விசாரணை செய்யப்படுகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.