ஷா ஆலம், பிப் 9: சிலாங்கூரில் கேபிள் திருட்டு வழக்குகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
குறிப்பாக தெரு விளக்குகள் மற்றும் சாலை உள்கட்டமைப்பு தொடர்பான கவலையளிக்கும் அதிகரிப்பு போக்கைக் காட்டுகின்றன என்று உள்கட்டமைப்பு EXCO தெரிவித்துள்ளது.
சந்தையில் அலுமினியத்தின் விலை அதிகரிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக செப்பு கேபிள்கள் சம்பந்தப்பட்ட சம்பங்களாக உள்ளன என்று டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.
மாநில நிலைக்குழுவின் தீர்வுக் கூட்டத்திலும் கேபிள் திருட்டு பிரச்சனை விரிவாக விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
"அலுமினியத்தின் மதிப்பு இப்போது அதிகமாக உள்ளது. முன்பு, பெரும்பாலான கேபிள்கள் தாமிரத்தைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. இது திருட்டுக்கான முக்கிய காரணமாக அமைகிறது.
"இந்த நிலைமை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் பொதுப்பணித் துறைக்கு (JKR) பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்த இழப்புகள் குறிப்பாக கடந்த ஆண்டில் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது," என்று அவர் கூறினார்.
"இந்த சம்பவங்களால் செலவு மட்டும் ஏற்படவில்லை, பாதுகாப்பு மற்றும் தெரு விளக்குகள் போன்ற பொது வசதிகளையும் பாதிக்கின்றன," என்று அவர் கூறினார்.
கேபிள் திருட்டு வழக்குகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள் நிறுவலை மாநில அரசு விரிவுபடுத்தும் என்றும் இஷாம் கூறினார்.


