கோலாலம்பூர், ஜன 20- மலேசியாவில் எதிர்வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு KTMB கொமுட்டர் இரயில் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
சுமார் 1 மில்லியன் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, குறிப்பாக பத்துமலைக்குச் செல்லும் இந்து பக்தர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்கு இந்தத் திருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும் வகையிலும் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் விவரித்தார்.

ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை (அன்று நள்ளிரவு 12:00 மணி முதல் மறுநாள் இரவு 11:59 மணி வரை) பயணிகள் தங்களின் பயண அட்டைகளை நுழைவாயில்களில் உள்ள தானியங்கி ஸ்கேனிங் முறையில் ஸ்கேன் செய்து இலவசமாகப் பயணிக்கலாம்.
இந்த இரண்டு நாட்களில் சுமார் 4,50,000 பயணிகள் பத்துமலைக்குச் செல்ல கொமுட்டர் சேவையைப் பயன்படுத்துவார்கள் என KTMB மதிப்பிட்டுள்ளது.


