ஷா ஆலம், ஜன 13 : எதிர்வரவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு ஜனவரி 19க்குள் விண்ணப்பிக்க புக்கிட் மெலாவத்தி தொகுதி அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வவுச்சர்கள் பிங்காஸ், SMUE அல்லது SMIS திட்டம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, சீன புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும், விண்ணப்பத்தாரர்கள் கட்டாயம் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும்.
“ இந்த உதவி ஒரு குடும்பத்திற்கு ஒரு வவுச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் மற்றும்
“ இந்த உதவி ஒரு குடும்பத்திற்கு ஒரு வவுச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளப்படுவர்.``
இந்த திட்டம், பண்டிக்கை காலங்களில் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த உதவிக்கான விண்ணப்பாரத்தைப் புக்கிட் மெலாவத்தி ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.


