நியூகாஸ்டல், ஜன 14- இங்கிலாந்து லீக் கப் காற்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணி நியூகாஸ்டல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
அரையிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி வெற்றிப்பெற்ற நிலையில் இறுதியாட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பு மென்செஸ்டர் சிட்டி அணிக்குச் சாதகமாக உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி அணிக்காக புதிதாக இணைந்த செமென்யோ எனும் ஆட்டக்காரர் 53ஆவது நிமிடத்தில் கோலை புகுத்தினார்.
பிறகு அவரே இரண்டாவது கோலையும் புகுத்தி மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


