இங்கிலாந்து கரபாவ் கிண்ண காற்பந்து போட்டி; அர்சனல் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

24 டிசம்பர் 2025, 6:32 AM
இங்கிலாந்து கரபாவ் கிண்ண காற்பந்து போட்டி; அர்சனல் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், டிச 24- இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் கடுமையாக போராடிய அர்செனல் அணியினர் 8-7 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.