லண்டன், டிச 24- இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் கடுமையாக போராடிய அர்செனல் அணியினர் 8-7 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.


