புத்ராஜெயா, ஜன 13- முன்னாள் தேசிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீண்டும் உயிர்ப்பிக்க முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கொண்டு வந்த மேல்முறையீட்டை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
நீதிபதிகள் பி.ரவீந்திரன், வோங் கியா கியோங், மற்றும் நட்ஸரின் வொக் நோர்டின் ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கினை விசாரித்தனர். கடந்த நவம்பர் 25, 2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நிலை நிறுத்துவதாக கூறி இந்த மேல்முறையீட்டை நிராகரித்தனர்.
1எம்.டி பி வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு மற்றும் அனைத்துலக பெட்ரோலியும் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தொடர்ந்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, விசாரணையை அலட்சியமாக மேற்கொண்டது என்று தோமி தோமஸ் மீது நஜிப் ரசாக் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும், முன்னாள் தேசிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ தோமி தோமஸ் அவர்களுக்கு டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் 12 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


