சுபாங் ஜெயா, 9 ஜன: சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (MBSJ) அந்த நகராட்சியில் திடீர் வெள்ள அபாயத்தை குறைக்கும் தொடர்ச்சியான நடவடிக்கையாக வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணியை தொடரும்.
சுபாங் ஜெயா நகரத் தலைவர் டத்தோ அமிருல் அஜிசான் அப்துல் ரஹிம் கூறுகையில், முன்னதாக அமல்படுத்தப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் – வெள்ள தடுப்பு அணைகள் (கேட்கள்) நிறுவுதல் மற்றும் ஆபத்தான இடங்களில் உடனடி நடவடிக்கை – சிலாங்கூரில் கடந்த டிசம்பரில் பெரிய வெள்ளம் ஏற்படாமல் இருந்ததற்கு நேர்மறையான விளைவுகளை காட்டியுள்ளன.
“கடுமையான வெள்ளம் ஏற்பட வில்லை என்பதற்கு நன்றி செலுத்துகிறோம். இம்முறை வெள்ள அபாயம் குறைந்துள்ளது... இது திட்டமிடல் மற்றும் அமல்படுத்தப்பட்ட தடுப்பு பணிகளின் விளைவு” என்று அவர் இன்று இங்கு MBSJ உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்த வெற்றியினால் உள்ளூர் அதிகார அமைப்புகள் (PBT) மகிழ்ச்சியில் மூழ்கிவிட கூடாது. மா றாக, வடிகால் அமைப்பின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.
வடிகால் மற்றும் வாய்காய்களை மேம்படுத்தும் பணிகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இது நீர் ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யும், குறிப்பாக பெருமழை காலத்தில்.
இந்த தொடர்ச்சியான நடவடிக்கை, மக்களின் நலன் உறுதி செய்வதும் வானிலை தொடர்பான பேரழிவுகளின் தாக்கத்தை குறைப்பது என்பது நகராட்சி மன்றத்தின் முக்கிய கவனம் என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த தவனைக்கான 24 MBSJ உறுப்பினர்கள் 1 ஜனவரி 2026 முதல் 31 டிசம்பர் 2027 வரையிலான காலத்துக்கு பதவியேற்று உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதில் 10 புதிய முகங்களும் 14 பேர் மீண்டும் நியமிக்கப்பட்டவர்களும் அடங்குவர்


