புத்ராஜெயா, டிச 18- மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் இன்று அதிகாரப்பூர்வமாகப் பணியைத் தொடங்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் இன்று காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கினார். அதன் பின், மனிதவள அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டத்தை அவர் நடத்தினார்.


