சிகாம்புட், 12 டிசம்பர்- சிகாம்புட்டில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 26-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்தார் என கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நடவடிக்கை மையம் பி.ஜி.ஓ தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இரவு மணி 8.46 அளவில் இச்சம்பவம் குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்த நிலையில், ஸ்ரீ ஹர்த மாஸ், மென்ஜலரா, செந்தூல் மற்றும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் தீயணைப்பு நிலையங்களின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டிடத்தின் தீ தடுப்பு அமைப்பு செயல்படாததால் தீயை அணைக்கும் முயற்சியில் சிக்கல் ஏற்பட்ட
வேளையில், அதிகாலை மணி 2.03-க்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.


