புங் மொக்தார்  மறைவைத் தொடர்ந்து லாமாக் மாநில சட்டமன்ற தொகுதியை தீர்மானிக்க எஸ். பி. ஆர்

5 டிசம்பர் 2025, 6:23 AM
புங் மொக்தார்  மறைவைத் தொடர்ந்து லாமாக் மாநில சட்டமன்ற தொகுதியை தீர்மானிக்க எஸ். பி. ஆர்
புங் மொக்தார்  மறைவைத் தொடர்ந்து லாமாக் மாநில சட்டமன்ற தொகுதியை தீர்மானிக்க எஸ். பி. ஆர்

கோத்தா கினாபாலு  நவம்பர் 29 ஆம் தேதி நடந்த மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வாரத்திற்குள் புங் மொக்தார் கலா மனதைத் தொடர்ந்து  லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதியின் நிலையை தேர்தல் ஆணையம் (EC) தீர்மானிக்கும்.

இறந்தவர் சபா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகர் முன் மக்கள் பிரதிநிதியாக இன்னும் பதவியேற்காததால் இந்த நிலைமை ஏற்பட்டதாக முன்னாள் பெட்டகாஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜேம்ஸ் லிகுஞ்சாங் விளக்கினார்.

இந்த சூழ்நிலையில், அந்த இடத்தை காலியாக அறிவிக்கும் அதிகாரம் சபாநாயகரிடம் இல்லை. "இந்த பதவிக்கு தேர்தல் தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது தேர்தல் ஆணைய அதிகார வரம்பிற்குள் உள்ளது" என்று சினார் டெய்லி இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். 

நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்த   மொக்தாரின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த ஜேம்ஸ், பொதுத் தேர்தல் நவம்பர் 20-2027 க்குள் அல்லது அதற்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என்றார். மீதமுள்ள பதவி காலம் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், தற்போது உள்ள சட்டங்கள் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேவையில்லை என்று கூறுகின்றன, ஆனால் இது மக்கள் சபையின் சபாநாயகர் முடிவிற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

சமீபத்திய சபா மாநிலத் தேர்தலில், சபா பாரிசன் நேஷனல் தலைவரான புங் மொக்தார், ஆறு முனை போட்டியில் 153 வாக்கு பெரும்பான்மையுடன்   லாமாக் மாநில சட்டமன்ற தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.  66 வயதான அவர் இன்று அதிகாலை 1:46 மணிக்கு இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.