சிப்பாங், 26 நவம்பர்: சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-ல் சட்டவிரோதமாக கார் வாடகை சேவை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவரை , அவரது ஹோண்டா HR-V வாகனத்துடன் கைது செய்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த நபர் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரு பயணிகளிடம் RM75 கட்டணத்துக்கு கோலாலம்பூருக்கு செல்லும் பயணத்தை வற்புறுத்தியதாக அறிக்கையில் தெரியவந்தது. பயணிகள் KLIA டெர்மினல் 1-இல் இருந்து கோலாலம்பூரிலுள்ள The Platinum by Couple Cove வரை அழைத்துச் செல்லப்படும் என்றும், இலக்கை அடைந்த பின் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டதாக தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM50,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று JPJ தனது முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இச்செயல்களில் கூட்டுச்செயலில் ஈடுபட்டவர்களும் அதே சட்டத்தின் 243(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படலாம் என JPJ எச்சரித்தது.
பொது மக்களுக்கு, KLIA டெர்மினல் 1 மற்றும் 2-இல் உள்ள அதிகாரப்பூர்வ கவுண்டர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட
மின்-ஹைலிங் பயன்பாடுகள் மூலம் மட்டுமே சட்டபூர்வமான போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துமாறு JPJ அறிவுறுத்தியுள்ளது.


