ad

பிரேசில் பருவநிலை மாநாட்டில் தீ

22 நவம்பர் 2025, 4:12 AM
பிரேசில் பருவநிலை மாநாட்டில் தீ

பெலம், 22 நவம்பர்-   பிரேசில், பெலமில் நடைபெறும் COP 30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

இருப்பினும், நேற்று ஏற்பட்ட அத்  தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் போது இத்  தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ, கட்டிடத்திற்கும் பரவத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இவ்விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இவ் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.